பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு
பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு
வள்ளலாம் கணபதியின் நல் ஆசியும் அருளும் கிடைத்து விடும்
பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடுMusic
ஊர் தோறும் குளத்தடியில் நம் கணபதி அமைந்திருப்பார்
ஒவ்வொரு மனிதனது நல் உள்ளத்திலும் குடியிருப்பார்
எல்லோரும் நலம் காண எண்ணுகின்ற மனிதருக்கு
எந்நாளும் விநாயகனின் திரு அருள் துணை இருக்கும்
தினம் தினம் மனம் துதிக்கும் அவன் அருள் நலம் சேர்க்கும்
பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு
Music
பெற்றோருக்கு மேலான உலகம் இல்லை என்றார்
கற்றோர்க்கு மேலான பெரியோர் இல்லை என்றார்
நற்றன விநாயகனை நாளும் தொழும் போது
அர்த்தம் புரிந்துவிடும்
திருள் அருள் துணை இருக்கும்
தினம் தினம் மனம் துதிக்கும்
அவன் அருள் நலம் சேர்க்கும்
பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடுMusic
ஒருநாளில் ஒருவேளை ஐங்கரனை நினைத்துவிடு
உயிர்கள் யாவும் உந்தனது சொந்தம் என கருதிவிடு
நீயும் இன்று வாழ்ந்துவிடு பிறரையும் வாழ விடு
இந்த எண்ணம் உனக்கிருந்தால்
திரு அருள் துணை இருக்கும்
தினம் தினம் மனம் துதிக்கும்
அவன் அருள் நலம் சேர்க்கும்
பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு
வள்ளலாம் கணபதியின் நல் ஆசியும் அருளும் கிடைத்து விடும்
பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு