தீயினில் எரியாத தீபங்களே

காற்றும் ஒருகணம் வீச மறந்தது
கடலும் ஒருநொடி அமைதியாய் கிடந்தது
தேற்றுவார் இன்றி எம் தேசம் அழுதது
தீருவில் வெளியிலும் தேகங்கள் எரிந்தது

தீயினில் எரியாத தீபங்களே -எம்
தேசத்தில் நிலையான வேதங்களே

தீயினில் எரியாத தீபங்களே -எம்
தேசத்தில் நிலையான வேதங்களே
மண்ணினில் விதையான முத்துக்களே -நாம்
மாதவம் செய்து பெற்ற சொத்துக்களே
நெஞ்சினில் நெருப்பேந்தி வாருங்கள் -புலி
நிச்சயம் வெல்லுமென்று கூறுங்கள்

தீயினில் எரியாத தீபங்களே -எம்
தேசத்தில் நிலையான வேதங்களே

Music
கடலினில் கடல்புறா பயணங்கள் போனது
சிறிலங்கா இராணுவம் பொறிவைக்க லானது

கடலினில் கடல்புறா பயணங்கள் போனது
சிறிலங்கா இராணுவம் பொறிவைக்க லானது
குமரப்பா புலேந்திரன் உடன் பத்து வேங்கைகள்
கொள்கையின்படி நஞ்சை குடித்தபின் சாய்ந்தனர்

குமரப்பா புலேந்திரன் உடன் பத்து வேங்கைகள்
கொள்கையின்படி நஞ்சை குடித்தபின் சாய்ந்தனர்
இளமையில் சருகாகிக் போனவரே -எம்
இதயத்தில் உருவான கோவில்களே

நெஞ்சினில் நெருப்பேந்தி வாருங்கள் -புலி
நிச்சயம் வெல்லுமென்று கூறுங்கள்

தீயினில் எரியாத தீபங்களே -எம்
தேசத்தில் நிலையான வேதங்களே

Music
அப்துல்லா ரகு நளன் ஆனந்தகுமார் மிரேஸ்
அன்பழகன் றெஜினோல்ட் பழனி கரனுடன் தவக்குமார்

அப்துல்லா ரகு நளன் ஆனந்தகுமார் மிரேஸ்
அன்பழகன் றெஜினோல்ட் பழனி கரனுடன் தவக்குமார்
ஆகிய வேங்கைள் அனலிடை போயினர்
காவிய நாயகர் களப்பலி ஆகினர்

ஆகிய வேங்கைள் அனலிடை போயினர்
காவிய நாயகர் களப்பலி ஆகினர்
மக்களுக்காக கடல் சென்றீரே -மண
மாலைகள் வாட முன்னர் போனீரே

நெஞ்சினில் நெருப்பேந்தி வாருங்கள் -புலி
நிச்சயம் வெல்லுமென்று கூறுங்கள்

தீயினில் எரியாத தீபங்களே -எம்
தேசத்தில் நிலையான வேதங்களே

Music
எங்களின் கடலிலே எவனெம்மை பிடிப்பது
எங்களின் படகினை எவனிங்கு தடுப்பது

எங்களின் கடலிலே எவனெம்மை பிடிப்பது
எங்களின் படகினை எவனிங்கு தடுப்பது
இந்திய அரசது ஏன்துணை போனது
இடியுடன் பெருமழை ஏன் உருவானது

எங்களின் கடலிலே எவனெம்மை பிடிப்பது
எங்களின் படகினை எவனிங்கு தடுப்பது
கண்களில் நீர் சுமந்து நிற்கின்றோம் -நீர்
காட்டிய பாதையிலே செல்கின்றோம்

நெஞ்சினில் நெருப்பேந்தி வாருங்கள் -புலி
நிச்சயம் வெல்லுமென்று கூறுங்கள்

தீயினில் எரியாத தீபங்களே -எம்
தேசத்தில் நிலையான வேதங்களே

தீயினில் எரியாத தீபங்களே -எம்
தேசத்தில் நிலையான வேதங்களே

மண்ணினில் விதையான முத்துக்களே -நாம்
மாதவம் செய்து பெற்ற சொத்துக்களே
நெஞ்சினில் நெருப்பேந்தி வாருங்கள் -புலி
நிச்சயம் வெல்லுமென்று கூறுங்கள்

நெஞ்சினில் நெருப்பேந்தி வாருங்கள் -புலி
நிச்சயம் வெல்லுமென்று கூறுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *