பச்சை வயலே பனங் கடல்வெளியே

பச்சை வயலே பனங் கடல் வெளியே

எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே
வன்னி அழகே மன்னாரின் நிலமே
தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே
மேகத்திரளே அலை மோதும் கடலே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே

பச்சை வயலே பனங் கடல் வெளியே

எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே

ஈழ நிலத்தினில் எத்தனை நாள்
இன்னும் சாவு பரவிடுமோ
உயிர் இங்கு மலிவென எத்தனை
நாளின்னும் கூவி திரிந்திடுமோ
ஈழ நிலத்தினில் எத்தனை நாள்
இன்னும் சாவு பரவிடுமோ
உயிர் இங்கு மலிவென எத்தனை
நாளின்னும் கூவி திரிந்திடுமோ

வாழும் வயதினில் வாச மலர்
இங்கு தீயில் எரிந்திடுமோ
எங்கள் வாசல் முழுவதும் சோகம்
விரித்திடும் பாயில் சரிந்திடுமோ
வாழும் வயதினில் வாச மலர்
இங்கு தீயில் எரிந்திடுமோ
எங்கள் வாசல் முழுவதும் சோகம்
விரித்திடும் பாயில் சரிந்திடுமோ

பச்சை வயலே பனங் கடல் வெளியே

எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே
வன்னி அழகே மன்னாரின் நிலமே
தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே
மேகத்திரளே அலை மோதும் கடலே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே

பச்சை வயலே பனங் கடல் வெளியே

எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே

அன்னை நிலத்தினில் காவற்
கரும்புலி ஆகி நடந்திடுவோம்
நாம் அங்கு எரிந்திடும் போதிற்
பகை மடி மீதிற் சிரித்திடுவோம்
அன்னை நிலத்தினில் காவற்
கரும்புலி ஆகி நடந்திடுவோம்
நாம் அங்கு எரிந்திடும் போதிற்
பகை மடி மீதிற் சிரித்திடுவோம்

அண்ணன் நினைவினில் எம்மை
மறந்துமே விண்ணில் பறந்திடுவோம்
எம் ஆசையெல்லாம் தமிழ் ஈழம்,
அதற்கென அங்கு வெடித்திடுவோம்
அண்ணன் நினைவினில் எம்மை
மறந்துமே விண்ணில் பறந்திடுவோம்
எம் ஆசையெல்லாம் தமிழ் ஈழம்,
அதற்கென அங்கு வெடித்திடுவோம்

பச்சை வயலே பனங் கடல் வெளியே

எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே
வன்னி அழகே மன்னாரின் நிலமே
தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே
மேகத்திரளே அலை மோதும் கடலே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே
நாங்கள் போகவிடை தாரும் தமிழ் ஈழ நிலமே

பச்சை வயலே பனங் கடல் வெளியே

எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே

தேசப் புயல் இங்கு வீசும்
பொழுதினில் சோகம் வருவதில்லை
தமிழ் வாசம் சுமந்திடும் பூக்கள்
இனி பகை தீயில் எரிவதில்லை
தேசப் புயல் இங்கு வீசும்
பொழுதினில் சோகம் வருவதில்லை
தமிழ் வாசம் சுமந்திடும் பூக்கள்
இனி பகை தீயில் எரிவதில்லை

நாளை எமக்கொரு வாழ்வு மலர்ந்திடும்
நம்பி இருந்திடுங்கள்
எம் தேகம் வெடித்திடும் போதில்
விடுதலை கீதம் படித்திடுங்கள்
நாளை எமக்கொரு வாழ்வு மலர்ந்திடும்
நம்பி இருந்திடுங்கள்
எம் தேகம் வெடித்திடும் போதில்
விடுதலை கீதம் படித்திடுங்கள்

பச்சை வயலே பனங் கடல் வெளியே

எங்கள் மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே
வன்னி அழகே மன்னாரின் நிலமே

தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *