அம்மா அம்மா… எந்தன் ஆருயிரே…

அம்மா அம்மா…
எந்தன் ஆருயிரே…
கண்ணின் மணியே…
தெய்வம் நீயே… ஓ… ஓ… ஓ… ஓ…
ஆண் : அம்மா அம்மா எந்தன் ஆருயிரே…
நானும் நீயும் என்றும் ஓருயிரே…
இரு கண்ணின் மணியே… ஓ… ஓ… ஓ… ஓ…
தெய்வம் நீயே… ஓ… ஓ… ஓ… ஓ…
ஆண் : அம்மா அம்மா எந்தன் ஆருயிரே…
ஆண் : பூவிழி ஓரம்…
ஓர் துளி நீரும்…
நீ வடித்தால் மனம் தாங்காது…ஆண் : பொன்முகம் கொஞ்சம்…
வாடி நின்றாலும்…
நான் துடிப்பேன் வலி தாளாது…
ஆண் : பத்து மாசம் சுமந்து…
பட்ட பாடும் மறந்து…
பிள்ளைச் செல்வம் பிறக்க…
அள்ளிக்கையில் எடுத்த…
ஆண் : தாயும் நீயே…
தவமிருந்தாயே…
வாடுதம்மா பிள்ளையே…
வாட்டுவதோ என்னை நீயே…
ஆண் : அம்மா அம்மா எந்தன் ஆருயிரே…
நானும் நீயும் என்றும் ஓருயிரே…
ஆண் : பாதைகள் மாறி…
ஓடிய கன்றை…
தாய்ப்பசுதான் இங்கு ஏற்காதா…
ஆண் : கூட்டிலிருந்து குஞ்சு விழுந்தால்…
தாய்க்குருவி அள்ளிச் சேர்க்காதா…
ஆண் : நல்ல காலம் பிறக்க…
உன்னை நானும் அறிந்தேன்…
உந்தன் கண்கள் திறக்க…
இங்கு பாடல் படித்தேன்…
ஆண் : போதும் போதும்…
பிரிந்தது போதும்…
வாடுதம்மா பிள்ளையே…
ஆண் : வாட்டுவதோ என்னை நீயே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *